Tuesday 28 October, 2008

சிரிக்கலாம் வாங்க

திருவாளர் மெனாங்குக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் " டுபாங்கு! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின்
100 வது தளத்திலிருந்து திருவாளர் மெனாங்கு குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் டுபாங்கு அல்ல மெனாங்கு என்று .
-------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்கு இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.
பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.
திருவாளர் மெனாங்கு கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?.
ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
-------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை திருவாளர் மெனாங்கு, நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.
மெனாங்கிடம் ஒரு கடி ஜோக் சொன்னார்.
அவர் மெனாங்கிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார்.
திருவாளர் மெனாங்கு 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.
உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
மெனாங்கு அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
வீட்டிற்க்கு வந்த உடன் திருவாளர் மெனாங்கு நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார்.
அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார்.
உடனே மெனாங்கு கடுப்பாகி சொன்னார், '
போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.
-------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்குக்கு அவரது அம்மா எழதிய கடிதம் ,
அன்புள்ள மெனாங்குக்கு,
நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.
நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை.
நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார்.
புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது,
ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த டுபாங்கு இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம்.
ஏன்னா அவன் வீட்டு அட்ரச மாற்ற வேண்டாம் பாரு..
இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது.
ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன்.
பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல.
கிளைமேட் ரொம்ப மோசமில்லை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது.
நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால்,
அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன்.
சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது.
இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள்.
மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெருமையாக எல்லோரிடமும் சொல்கிறார்.
முக்கியமான செய்தி,
உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை,
அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல.
வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..
அன்புடன் உன் அம்மா
-------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க நகர் ஒன்றில், திருவாளர் மெனாங்கு ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் .
நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.மெனாங்கும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் திருவாளர் மெனாங்கின் காரை முந்திக்கொண்டு சென்று ,
அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , மெனாங்கிடம் 'குட் வ்னிங் சார்..'திருவாளர் மெனாங்கு 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'.போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்.
ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.
அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
திருவாளர் மெனாங்கு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க,
உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மெனாங்கின் காது கேட்காத அம்மா சொன்னார்,
'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
-------------------------------------------------------------------------------------------------
மெனாங்கு,டுபாங்கு இரண்டு பெரும் நண்பர்கள் ,
இருவரும் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.
மெனாங்கு சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம்,
அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது.போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன்,
அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்"
.'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் டுபாங்கு.அதற்கு மெனாங்கு "என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".டுபாங்கு தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது.அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை.அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை.வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்றுமூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மெனாங்கு."வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
-------------------------------------------------------------------------------------------------

கலைஞர் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அவசியமா?

தமிழக முதல்வர் திரு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தற்போது ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார் . இந்நினலையில் தற்போது அவர் ஒய்வு பெற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே தோன்றி, இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. கலைஞர் இந்தமுறை முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பல தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றி நல்ல விதமாகத்தான் ஆட்சியை தொடங்கினார், ஆனால் தற்போது பல்வேறு அமைச்சர்களை பற்றி வரக்கூடிய குற்றச்சாட்டுகள் , விலைவாசி உயர்வு, காவல் நிலையங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு , இவை எல்லாவற்றையும் விட மின்வெட்டு ஆகிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் சற்றே திணறிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.தற்போதைய திமுக ஆட்சிக்கும், முன்னர் 1996-2001-ல் நடைபெற்ற ஆட்சிக்கும் பெருமளவில் வித்தியாசங்களை உணர முடிகிறது. அதாவது இந்த முறை திமுகவின் ஆட்சி கலைஞரின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. கலைஞர் தன்னுடைய முதுமை காரணமாக ஆட்சியில் தனது பிடியை இழந்து வருகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கலைஞர் அவர்களுக்கு தற்போது எண்பத்தைந்து வயதாகிறது, ஏற்கனவே நான்கு முறை தமிழக முதல்வராக செயலாற்றி தன்னுடைய எண்ணங்கள், தமிழக மக்களுக்கு தான் செய்ய விரும்பிய நன்மைகள் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார். இனிமேல் அவர் முதல்வராக இருந்து அவர் பெற வேண்டிய புகழ் எதுவும் இல்லை, புதிதாக எந்தப் பட்டத்தையும் பெறப் போவதில்லை, மக்களிடம் ஏற்கனவே இருக்கும் அபிமானத்தை விட அதிகம் பெறப் போவதுமில்லை. முன்பு போல அவரது உடல்நிலையும் ஒத்துழைப்பதாக தெரியவில்லை.தினந்தோறும் அதிகாலையில் இளைஞர்களை போல நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்த கலைஞர் இப்போதெல்லாம் மேடை வரைக்கும் கூட சக்கர நாற்காலியிலே வர வேண்டிய நிலையில்தான் அவரது உடல்நிலை உள்ளது..மேடையிலே மணிகணக்காக அவர் நிகழ்த்தும் உரையை கேட்டு கேட்டு அவரின் விசுவாசிகளாக மாறிய திமுக உடன்பிறப்புகள் இன்று அவர் மேடையிலே நின்று கூட பேசமுடியாமல் உட்கார்ந்து பேசுவதைக் கண்டு கண்கலங்குகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கலைஞர் இன்னும் முதல்வராகத் தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றி மேலும் தனது உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வதை அவர் நலம் விரும்பும் யாரும் விரும்பவில்லை , ஆனாலும் கலைஞர் தனது முதல்வர் பதவியில் தொடர விரும்புவதாகவே தெரிகிறது.கலைஞர் தான் நாற்பது வருடமாக கட்டி காப்பாற்றி வளர்த்த திமுக ,தனது காலத்திற்குப் பின் சிதறுண்டு போகாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் தனது காலத்திலேயே தனக்குப் பின் தனது தொண்டர்களை தலைமையேற்கப் போகும் தலைவர் யார் என்பதை தொண்டர்களுக்கு அடையாளம் கட்டி தானே அவரை அப்பதவியில் அமர வைத்து விட வேண்டும், இல்லையென்றால் கலைஞரின் காலத்திற்கு பின்னால் திமுக சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது .கலைஞரின் அரசியல் வாரிசாக அவரால் அடையாளம் காட்டப்பட்டு இன்று திமுகவின் தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் , ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பின் தனக்கு கட்சியிலும், குடும்பத்திலும் வரும் எதிர்ப்புகளை சமாளித்து தலைவராக அவரால் முடியுமா என்பது சந்தேகமே...அப்படியே ஸ்டாலின் தனது எதிர்ப்புகளை சமாளித்து தலைவராக மாறினால் கூட பின்னர் தேர்தலை சந்தித்து மற்ற கட்சிகளை எல்லாம் வென்று ஆட்சியை பிடித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை ..எனவே கலைஞர் தற்போதே ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுத்து, தன்னுடைய காலத்திலேயே கட்சிக்கு ஸ்டாலினை தலைவராக்கி தான் ஒரு வழிகாட்டியாக செயல்பட்டு கட்சியை பலப்படுத்துவதே நல்லது. அதுவே தான் இத்தனை நாளாக அரும்பாடு பட்டு வளர்த்த கட்சியை தனக்குப் பின்னும் காப்பாற்றக் கூடிய செயலாகும். ஸ்டாலின் ஏற்கனவே தனக்கு தரப்பட்ட பொறுப்புகளை சரியாகச் செய்து வந்ததாகவே தெரிகிறது, சென்னை நகரின் மேயராக அவர் செயல்பட்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது, தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் அவரது சயல்பாடு கலைங்கராலேயே பலமுறை பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கலைஞர் தன்னுடைய முதுமையால் ஆட்சியில் கவனம் குறைந்து அதனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, தான் இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றி வந்த நற்பெயரை இழப்பதை விட , தனது மகனான ஸ்டாலினை ஆட்சியில் அமர வைத்து தான் ஒரு வழிகாட்டியாக செயல்படுவதே நல்லது.........
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/09/blog-post_29.html"

கலைஞரின் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் திட்டம் மோசடித் திட்டமா? - ஒரு அலசல்......

கலைஞர் அவர்களால் காந்திஅடிகள் பிறந்தநாள் முதல் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து விதமான மளிகைப் பொருட்களை ஐம்ப்து ரூபாய்க்கு வழங்குவதே இந்தத் திட்டமாகும் .விலைவாசி தினந்தோறும் உயர்ந்துவரும் இந்த இந்த நேரத்தில் கலைஞர் அறிவித்துள்ள இந்தத் திட்டமானது , நிச்சயமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக் கூடியதாகவே தெரிகிறது,தமிழக அரசு இந்தத் திட்டத்தின் படி வழங்கக் கூடிய பொருட்களின் பட்டியல்,மஞ்சள் தூள் 50 கிராம்,கடலைப் பருப்பு 75 கிராம்,சோம்பு 25 கிராம்,பட்டை லவங்கம் 10 கிராம்,மல்லித்தூள் கால்கிலோ,வெந்தயம் 25 கிராம்,மிளகு 25 கிராம்,மிளகாய்த்தூள் கால் கிலோ,கடுகு 25 கிராம்சீரகம் 50 கிராம்ஆகிய 10 பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளாக ஐம்பது ரூபாய்க்கு வழங்கிகிறது அரசு .அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் தலையாய கடமை என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழக எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தையும் எதிர்த்து பல்வேறு விமர்ச்சனக் கருத்துகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.நடிகர் விஜயகாந்த் இந்தப் பட்டியலில் உள்ள பொருட்கள் எல்லாம் சாதாரணமாக கடையில் வாங்கினாலே முப்பத்தி ஐந்து ரூபாய்க்கே கிடைப்பதாகக் கூறியுள்ளார் , இதை மறுத்த கலைஞர் அவ்வாறு கிடைத்தால் இன்னும் விலையைக் குறைத்து மக்களுக்குக் கொடுக்கப் படும் என தெர்வித்து உள்ளார்.எப்போதுமே கலைஞரின் திட்டங்களை அந்த அடிப்படையும் இல்லாமல் ஜெயலலிதாதான் எதிர்த்து கேலியும் கிண்டலும் செய்வார் , எனவே அவர் கூறுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று நான் எண்ணுவதுண்டு,விஜயகாந்த் புதிதாக வந்துள்ளவர்தானே அவர் கூறுவது கொஞ்சம் நியாயமாக இருக்குமோ என்றெண்ணி அவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அரசு வழங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலை எங்கள் மளிகைக் கடைக் காரரிடம் கொடுத்து விலை விசாரித்தேன் , அவர் கொடுத்த விலைப் பட்டியல் இதோ ,மஞ்சள் தூள் 50 கிராம் - ரூ5.00கடலைப் பருப்பு 75 கிராம் - ரூ7.50சோம்பு 25 கிராம் - ரூ3.00பட்டை லவங்கம் 10 கிராம் - ரூ5.00மல்லித்தூள் கால்கிலோ- ரூ20.00வெந்தயம் 25 கிராம் - ரூ 1.25மிளகு 25 கிராம் - ரூ5.00மிளகாய்த்தூள் கால் கிலோ- ரூ15.00கடுகு 25 கிராம் - ரூ1.25சீரகம் 50 கிராம் - ரூ10.00மொத்தம் எழுபத்து மூன்று ரூபாய் வருகிறது , ஒருவேளை இவர் வாங்கும் விலையை கணக்கில் கொண்டால் கூட எப்படியும் 65ரூபாய்க்கு குறையாமல் வருகிறது.விஜயகாந்தும் ஜெயலலிதாவை போலவே கண்மூடித்தனமாக அரசின் நல்ல திட்டங்களைக் கூட எதிர்க்கிறார் என்று தெரியவருகிறது, எனவே இனிவரும் காலங்களில் விஜயகாந்தின் அறிக்கைகளுக்கு எந்த மாதிரியான மதிப்பளிப்பது என்று தெரியவில்லை .எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மக்கள்நலன் விரும்பும் உண்மையுள்ள , நாட்டின் நலனுக்காக செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,அரசு கொண்டுவரும் திட்டங்கள் நல்ல திட்டங்களாக இருந்தால் அதை வரவேற்று அத்திட்டங்கள் முறையாக எந்தவித முறைகேடும் நடைபெறாமல் மக்களை சென்றடைகிறதா என்று கண்காணித்து முறைகேடுகளைத் தடுத்து மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்ய வேண்டும்அரசு கொண்டுவரும் திட்டங்கள் உணமையிலேயே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால் அதை எதிர்த்துப் போராடி மக்களை அந்த பாதிப்பில் இருந்து காப்பற்ற வேண்டும்இப்படி செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகத் தத்துவம் அர்த்தமுடையதாக இருக்கும் , அல்லது ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகவே மாறிவிடும் என்பதே எனது கருத்து....பின் குறிப்பு: (எழுபத்தி ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள இந்தப் பொருட்கள் வெறும் முப்பத்தி ஐந்து ரூபாய்க்கே கிடைப்பதாக விஜயகாந்த் கூறியதால் விஜயகாந்தின் வீட்டிற்கு தமிழக மக்கள் அனைவரும் கையில் முப்பத்தி ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு பையுடன் திரண்டு வந்து கொண்டிருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன ).
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/10/50.html"

வைகோ இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பியா? நம்பிக்கைத் துரோகியா?


வைகோ இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பியா? நம்பிக்கைத் துரோகியா?
வைகோவின் உண்மையான நோக்கம் என்ன?வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளியை உடைத்தது போன்ற காரியத்தைத்தான் வைகோ இப்போது செய்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் 1991 க்கு முன்பும் 1991க்குப் பின்னும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் பேசவே பலரும் தயங்கும் நிலை ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களைப் பற்றிப் பேசினாலே அவர்கள் தேசவிரோதிகள் என்று கூறும் சூழ்நிலை உருவாகியது.அதன் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.சிலகாலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் ஒதுங்கியே இருந்த தமிழக முதல்வர் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைத் தமிழர்களைக் காக்க அணிதிரள ஆரம்பித்தனர்.வைகோ இலங்கை தமிழர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய விரும்பி இருந்தால் ,அய்யா மருத்துவர் ராமதாஸ் " திமுகவிற்கும் தங்களுக்கும் எத்தனையோ அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் இலங்கைத் தமிழர்களைக் காக்க முதல்வருடன் கைகோர்ப்போம் " என்று கூறினார் அது போல வைகோவும் செய்திருக்க வேண்டாமா?கடந்த மூன்றாண்டுகளாக தோல்வியிலும் துவளாத கூட்டணியாக இன்று வரை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து வரும் நல்லுறவைப் பயன்படுத்தி அவரையும் இப்போராட்டங்களுக்கு ஆதரவாக மாற்ற முயற்சித்து இருக்க வேண்டாமா ?தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது உண்டாகியுள்ள ஆதரவுக் குரல்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நல்ல தீர்வை எட்ட முயற்சித்து இருக்க வேண்டும் அல்லவா?மத்திய அரசில் நல்ல செல்வாக்குடன் உள்ள தமிழக முதல்வர் அவர்களே இலங்கைத் தமிழர்களைக் காக்கப் பதவியைத் துறக்கத் தயார் என அறிவித்து போராட்டத்தில் குதித்து விட்ட பின்னர் , தானும் களத்தில் குதித்து போராட்டங்களைப் பலப்படுத்தி இருக்க வேண்டாமா?இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆக்கப் பூர்வமான முறையில் தன்னுடைய கருத்துகளை வலியுறுத்தி இருக்க வேண்டாமா?இவை எதையும் வைகோ செய்யவில்லை ,இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக செயல்பட விரும்பாத கட்சிகளும் , தலைவர்களும் எதையாவது கூறி இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சி அலையை அடக்கிவிட வேண்டும் எனக் காத்துக் கொண்டு இருந்தனர் .தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்களை தேசவிரோதிகள் என்று கூறின.தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் எல்லாம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமானவர்கள்தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் எல்லோரும் பிரிவினைவாதிகள் ,தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டில் வன்முறைத் தூண்டி நாட்டை துண்டாடிவிடுவார்கள்,தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் ,இப்படி எதையாவது இட்டுகட்டிக் கூறி இலங்கைத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அனுதாப அலையைக் கெடுக்க முயன்று வந்தனர்.இந்நிலையில்தான் திடீரென வைகோ எந்த வித அவசியமும் இல்லாமல்21.10.2008 அன்று ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் இப்படிப் பேசியுள்ளார்,இந்திய அரசே இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க முயற்சித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுத்து விடாதேதமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் முதல் ஆளாக ஆயுதம் ஏந்துவேன்.தமிழக இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதற்காக திரட்டுவேன்.அந்தக் கூட்டத்தில் மு.கண்ணப்பன் பேசியவை,தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும்,இந்தியாவின் இறையாண்மையை முதல்வர், பிரதமர் போன்ற யாராலும் காக்க முடியாது.இவர் பேசிய இந்தப் பேச்சுகளால் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன ?வெறும் வாயை மென்று கொண்டு இருந்தவர்களுக்கு அவல் கொடுத்து மெல்ல சொன்னது போல வைகோ பேசிய பேச்சுகள் அமைத்து விட்டன,வைகோவின் இக்தகைய பேச்சுகளைக் கேட்ட, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக செயல்பட விரும்பாத தலைவர்கள் இதுவரை கூறி வந்தது இப்போது உண்மை ஆகி விட்டதல்லவா? எனக் கூறத் தொடங்கி விட்டனர்.இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி அலையை அடக்க ஏதாவது காரணம் கிடைக்காதா என தவித்து வந்த இவர்களுக்கு வைகோவின் பேச்சுகள் மிகப் பெரிய ஆதாரங்கள் ஆகிவிட்டன .தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களைக் காக்க செயல்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது.வைகோ பேசிய பிரிவினைவாதப் பேச்சுகள் மத்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தலையிடுவதை மறு பரிசீலனை செய்யவைத்து விடாதா?அனுபவமுள்ள அரசியல்வாதியான வைகோ இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக ஏற்பட்ட அனுதாப அலையை சாதகமாகப் பயன்படுத்தாமல், இந்தியாவில் பிரிவினை ஏற்படுத்தப் போவதாகப் பேசுவதால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கப் போகிறது?வைகோ தனது பிரிவினைவாதப் பேச்சுகளால் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க உருவான ஒரு நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதா?.....

ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதா?.....
ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதாக ஊரெல்லாம் ஒரே பேச்சு . எனக்கு நண்பர்கள் , உறவினர்கள் என பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரித்தனர், நான் அந்த வங்கியில் பல ஆண்டுகளாக நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளதால் எதுவும் பாதிப்பாகி விடக் கூடாது என்று உண்மையான அன்பில் சிலர் எச்சரிக்க , சிலரோ எதுவும் பாதிப்பாகி விட்டதா என தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைவதற்காக அழைத்திருந்தனர் ....சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனமான லீமேன் பிரதர்ஸ் திவால் அறிவிப்பை வெளியிட்டதே இதற்கு அடிப்படை காரணமாக அமைந்து , இந்தியா முழுவதும் ஐசிஐசிஐ வங்கி திவாலாகப் போவதாக வதந்தி பரவி பலரையும் திடுக்கிட வைத்தது .எப்போதும் போல எனது நடப்பு கணக்கில் எனது வாடிக்கையாளர்கள் வரவு வைத்திருந்த பணம் பற்றிய விவரங்களை சரி பார்க்க வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி , ஏடிஎம் மையம் பூட்டப் பட்டு இருந்தது. ஏடிஎம் மையத்தின் முன்னால் பெருந்திரளான மக்கள் கூட்டம் , காவலரிடம் என்னவென்று விசாரித்த போது, அவர் எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மிகவும் வருத்தப்பட்டு மனம் விட்டுப் பேசினார் ,அதாவது நான் எப்போதும் செல்லும் அந்த ஏடிஎம் மையம் , இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பணம் நிரப்பப் படும் என்றும் , மாதத்தின் முதல் வாரம் மட்டும் சம்பள பட்டுவாடா காரணமாக தினந்தோறும் நிரப்பப்படும் என்றும் கூறினார் , ஆனால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்ததால் ஒருநாளைக்கு இரண்டு முறை நிரப்பப்பட வேண்டியிருப்பதாக கூறினார், அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை ஏடிஎம் மையங்கள் மூலமாக திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தனர் . நாடு முழுவதும் இதே நிலை நிலவுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஐசிஐசிஐ வங்கி தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில் , அமெரிக்காவின் லீமேன் பிரதர்ஸ் முதலீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி மிககுறைந்த அளவில் மட்டுமே முதலீடு செய்துள்ளதாகவும் , அந்த முதலீடும் பாதுகாப்பாக உள்ளது என்றும் , வங்கியின் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப் படத் தேவையில்லை எனவும் கூறப் பட்டது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் இந்த விவகாரத்தில் அளித்த விளக்கத்தில் ,இது போல எந்த ஒரு அந்நிய நாட்டில் ஏற்படும் பாதிப்பும் இந்திய வங்கிகளையோ , அல்லது இந்திய பொருளாதாரத்தையோ பாதிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ,எது எப்படியிருந்தாலும் உழைத்து சேர்த்த பணத்தை சீட்டு நிறுவனங்களிடமும் , அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு தனியார் நிதி நிறுவனங்களிடமும் ஏமாந்த மக்கள் , பின்னர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர், சமீபகாலமாக பங்குச் சந்தையும் பெரிய அளவில் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், கிடைப்பது குறைந்த வட்டியாக இருந்தாலும் , பாதுகாப்பாக இருக்குமென்று நம்பி வங்கிகளில் முதலீடு செய்த மக்களின் தலையில் இது போன்ற செய்திகள் இடியாகத்தான் இறங்கும் .....இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் தொலைக்காட்சி, நாளிதழ் போன்ற ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டால் மக்களிடையே ஏற்பட்ட இதுபோன்ற பீதிகளையும், குழப்பங்களையும் தவிர்க்கலாம் .......
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/09/blog-post_26.html"

Friday 17 October, 2008

ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள்


ஜாதகம் கணிக்க இலவசமென்பொருள்
ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மென்பொருள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது! தேவையானால் ஜாதகங்களைக் கணித்துப் பிரதி போட்டு எடுத்துக் கொள்ளலாம் அல்லது கணினியிலே சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். User Friendly Software அதுதான் குறிப்பிடத்தக்கது!உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும்தான் தேவை1. பெயர்2. பிறந்த தேதி3. பிறந்த நேரம்4. பிறந்த ஊரின் பெயர் (கிராமமாக இருந்தால் அருகில் உள்ள -அதாவது 30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயர் -City or Townனின் பெயர் வேண்டும்)இந்த மென்பொருள் பல அம்சங்களோடு ஜாதங்களைக் கணித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது!. இராசிச் சக்கரம்,நவாம்சச் சக்கரம், பாவச்சக்கரம், தாசாபுத்திகள், அஷ்டவர்க்கம், ஜாதகத்தில் உள்ள நல்ல/கெட்ட யோகங்கள் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!இந்த அற்புதமான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளத்தின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் இறக்கிப் பதிவு செய்து வைய்யுங்கள்Sri Jagannatha Horo - Vedic Astrology Software - Verson 5URL: http://www.SriJagannath.orgஊரின் பெயர்களெல்லாம் அதிலேயே உள்ளன.ஒரு வேளை உங்களுடைய நகரம் விடுபட்டிருந்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறதுஉங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும் (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது. யார் யாரோ புண்ணியவான்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமி¢ப்பாக இருக்கும். பின்னே சும்மாவா? உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறுய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன. அதன் முகவரி:www.heavens-above.com

Tuesday 14 October, 2008

தியானம்

தியானம் செய்து பாருங்களேன்
எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம். யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள். தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!






பில்கேட்ஸ் ஒரு சகாப்தம்


பில் கேட்ஸ் என்று உலகெங்கும் அறியப்படும் கணினி மென்பொருள் விற்பன்னர். மைக்ரோசாஃப்ட் என்னும் மாபெரும் கணினி மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியவர். தனது 52-வது வயதில், இன்றுடன் தனது தினசரி அலுவல்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். தன்னிடம் இருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் காரணமாக நிறுவனத்தின் non-executive chairman-ஆகத் தொடர்ந்து இருப்பார்.பில் கேட்ஸ்மீது பலருக்கு தீராக் காதலும் மிச்சம் உள்ளவர்களுக்கு கடும் வெறுப்பும் உண்டு. தசாவதாரம் படம் பார்த்தவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.பில் கேட்ஸ் கணினி மென்பொருள் எழுதுவதில் மாபெரும் மேதை என்று சொல்லமுடியாது. கணினி இயக்குதளங்கள், நிரல் மொழிகள், மென்பொருள் பேக்கேஜ்கள், கணினி உலகில் புதுச் சிந்தனைகள் என்று எதுவும் இவரிடமிருந்து வந்தது கிடையாது.இவரது வெற்றியின் ரகசியம், விடாமுயற்சி, தளராமை, எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற வெறி. பிறரது உழைப்பையும் பிறரது சிந்தனைகளையும் தனதாக்கிக்கொண்டு அவற்றுக்கு விற்பனை முலாம் பூசி, வர்த்தக அளவில் பெரும் சாதனை புரிந்தவர்.ஐ.பி.எம் நிறுவனம் செய்த சில தவறுகளால் பில் கேட்ஸுக்கு அடித்தது லக்கி பிரைஸ். தொடர்ந்து அவர் தவறுகள் செய்தபோதெல்லாம், பிறர் அந்தத் தவறுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளாததால் அவருக்கு இன்றுவரை அதிர்ஷ்டம் தொடர்ந்துள்ளது.இன்று மைக்ரோசாஃப்ட் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல.முதலாவதாக கூகிள் என்னும் அதிவேகமாக வளரும் இணையச் சேவை நிறுவனம். கணினி என்பது நிஜமாகவே வெறும் ஜன்னல்போலத்தான் என்பதை நிரூபித்துள்ள நிறுவனம். ஜன்னலுக்குப் பின்புலத்தில் கணினியின் இயக்குதளமோ, மென்பொருள்களே அவசியமே இல்லை, தடியான ஓர் இணையக் குழாய் போதும் என்கிறது கூகிள். அப்படியென்றால் மைக்ரோசாஃப்ட் ஒரு டம்மி. கூகிள் நினைப்பதுமட்டும் நடந்துவிட்டால் மைக்ரோசாஃப்ட் காலியாகிவிடும்.இரண்டாவது இணையச் சேவை வழங்கிகள் துறையில் லினக்ஸ் பெற்றிருக்கும் பெரு வெற்றி. கூகிள் மேசைக்கணினிகளைத் தள்ளிக்கொண்டு போய்விடும் என்றால் மறுபக்கம் பல்வேறு இணையச் சேவைகளை வழங்குவதில் மைக்ரோசாஃப்டுக்குக் கடும் சவாலை அளிக்கிறது முற்றிலும் இலவசமான லினக்ஸ் இயக்குதளம். இந்தத் துறையில் மைக்ரோசாஃப்டுக்கு முன்னோடி யூனிக்ஸ் சேவை வழங்கிகளும் அதன் குழந்தையான லினக்ஸும். மைரோசாஃப்ட் அதற்குப் பின்னே சேவை வழங்கிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனால் செயல்திறனில் இவை லினக்ஸ் அருகே நெருங்கக்கூட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும் தனது சந்தைப்படுத்தும் திறனால் மைக்ரோசாஃப்ட் இங்கேயும் நிறையப் பணம் பண்ணுகிறது. இது தொடருமா என்பது பெரும் சந்தேகமே.மூன்றாவது, கணினி சம்பந்தப்பட்டதே அல்ல. இன்று கையடக்கமான செல்பேசிகள் கணினி செய்யும் பலவற்றைச் செய்யத் தொடங்கியுள்ளன. இங்கு விரைவில் நோக்கியா வசமாகப்போகும், ஓப்பன் சோர்ஸாகவும் ஆகப்போகும் சிம்பயான் இயக்குதளம் முன்னணியில் உள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இந்தவகை செல்பேசிகளில் மிகக் குறைவான அளவே உள்ளது. சந்தையில் சதவிகிதத்தை அதிகரிக்க மைக்ரோசாஃப்டால் முடியும் என்று தோன்றவில்லை.நான்காவது, கேளிக்கை சம்பந்தப்பட்டது. ஆப்பிளின் ஐபாட், அடுத்து ஐஃபோன் ஆகியவை மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மைக்ரோசாஃப்டிடமிருந்து இதைப்போன்ற ஒரு யோசனை வரவில்லை.மற்றவர் செய்வதை உடனடியாகப் பார்த்து காப்பியடித்து வெற்றிபெறும் மைக்ரோசாஃப்ட், நான்கு பக்கமும் நெருக்கடி ஏற்படும்போது யாரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்புகிறது.பில் கேட்ஸ் உருவாக்கி வைத்துள்ள கணினி சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பது எளிதான விஷயமல்ல. நான்கு பக்கத்திலிருந்தும் நான்கு படைகள் முற்றுகையிடுகின்றன. அதைத்தவிர ஃபேஸ்புக், மைஸ்பேஸ், கூகிளின் ஆர்க்குட், ட்விட்டர் என்று புதிய புதிய விஷ சர்ப்பங்கள் முளைத்து பயமுறுத்துகின்றன.ஆனாலும் இதையெல்லாம் மீறி, இன்று மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருள்களையும் இயக்குதளங்களையும் விற்று பெரும் காசு பார்க்கிறது. இது எத்தனை நாள்களுக்குத் தாங்கும் என்று தெரியாவிட்டாலும்கூட, இன்றும் வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது மைக்ரோசாஃப்ட் அளவுக்குப் பெரிய நிறுவனம் இந்தத் துறையில் இல்லை.ராஜ பரம்பரைகளில் ஒரு குறிப்பிட்ட ராஜாவின் பெயர் தனியாக நிற்கும். அவரது காலத்தில் மிகப்பெரும் உன்னத நிலையை அடைந்தபிறகு அந்த சாம்ராஜ்யம் அடுத்த சிலரது ஆட்சியில் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பிக்கும். ஒரு ராஜராஜனுக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யமும், நரசிம்மவர்மனுக்குப் பிறகு பல்லவ சாம்ராஜ்யமும்போல.பில் கேட்ஸும் மைக்ரோசாஃப்ட் சாம்ராஜ்யமும்கூட அப்படித்தான் என்பது என் கருத்து.

தங்க பறவை


தங்கப் பறவை
(Grimms' Fairy Tales, The Golden Bird, abridged and retold by Badri)ஒரு ராஜாவின் அழகான தோட்டத்தில் தங்க ஆப்பிள் காய்க்கும் அற்புதமான மரம் ஒன்று இருந்ததாம். அந்த மரத்தில் உள்ள தங்க ஆப்பிள்களை எண்ணி கணக்கு பார்த்து வைத்திருப்பார்கள். ஆனால் பழங்கள் பழுக்க ஆரம்பித்த நேரம், நாள் ஒன்றுக்கு ஒன்றாக ஒரு தங்க ஆப்பிள் காணாமல்போகத் தொடங்கியது.ராஜாவுக்கு ஒரே கோபம். தோட்டக்காரனைக் கூப்பிட்டு கடுமையாகத் திட்டினார். தோட்டக்காரன், தனது முதல் மகனைக் கூப்பிட்டு, “ராத்திரி தூங்காமல் கவனமாகப் பார். யார் திருடிக்கொண்டு போகிறானோ அவனைப் பிடித்துவிடவேண்டும்” என்றான்.அன்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணி ஆகும்போது காவலுக்கு உட்கார்ந்திருக்கும் முதல் மகன் தூக்கத்தில் ஆழ்ந்தான். அன்றும் ஒரு தங்க ஆப்பிள் காணாமல் போனது. அடுத்த நாள் தோட்டக்காரன் தனது இரண்டாவது மகனைக் காவலுக்கு அனுப்பினான். அன்றும் நடு இரவில், இரண்டாவது மகனும் தூங்க, அன்றும் ஓர் ஆப்பிள் காலி. தோட்டக்காரனுக்கு மூன்றாவது மகன் ஒருவன் இருந்தான். சிறியவன். எனவே தோட்டக்காரன் அவனைக் காவலுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஆனாலும் மூன்றாவது மகனது நச்சரிப்பைத் தாங்கமாட்டாமல் அனுப்பிவைத்தான்.அன்று இரவு, மூன்றாவது மகன் தூங்காமல் காவல் காத்தான். நள்ளிரவில் தங்கத்தான் ஆன ஒரு பறவை பறந்து வந்து, தங்க ஆப்பிளைக் கொத்தியது. மூன்றாவது மகன் அந்தப் பறவையை நோக்கி அம்பை எய்தான். ஆனால் தங்கப் பறவை தப்பியோடியது. அதன் ஓர் இறகு - முழுவதும் தங்கத்தால் ஆனது - மட்டும் கீழே விழுந்தது.அடுத்த நாள் அந்தத் தங்க இறகை ராஜாவிடம் காட்டினார்கள். ராஜா அந்தப் பறவையை உயிருடன் பிடித்துக்கொண்டுவருமாறு கட்டளையிட்டார். தோட்டக்காரனின் முதல் மகன் கிளம்பினான். காட்டுக்குள் செல்லும்போது அங்கே ஒரு நரி உட்கார்ந்திருந்தது. அதை அம்பு எய்திக் கொல்ல, குறிவைத்தான். உடனே நரி, “என்னைக் கொல்லாதே. நீ தங்கப் பறவையைப் பிடிக்க இங்கே வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்படியே நடந்தால் மாலையில் ஒரு கிராமத்தை அடைவாய். அங்கே இரண்டு தங்கும் விடுதிகள் எதிரெதிராக இருக்கும். அதில் ஒன்று அழகாகவும் வசதியாகவும் இருக்கும். மற்றொன்று குப்பையாகவும் மோசமாகவும் இருக்கும். அதில் மோசமானதில் தங்கு” என்றது.இந்த நரிக்கு என்ன தெரியும் என்று எகத்தாளத்துடன் முதல் மகன் அதை நோக்கி அம்பை எய்தான். ஆனால் அம்பு குறிமீது படவில்லை. நரி தப்பியோடியது.அன்று மாலை நரி சொன்னதுபோன்றே ஒரு கிராமத்தை அடைந்த அவன், மோசமான விடுதிக்குள் நுழைவது பைத்தியக்காரத்தனம் என்று எண்ணி, அழகான விடுதிக்குள் நுழைந்தான். அங்கே இஷ்டத்துக்கு சாப்பாடு, மது என்று சந்தோஷமாக நாள்களைக் கழிக்க ஆரம்பித்தான். தங்கப் பறவையை மறந்தான். தன்னை மறந்தான்.வெகு நாள்களாகியும் முதல் மகன் வரவில்லை என்றதும் இரண்டாவது மகன் கிளம்பினான். அவனும் நரியைச் சந்தித்தான். அது கொடுத்த அறிவுரையை அவனும் சட்டை செய்யவில்லை. தன் அண்ணனைப் போலவே நரியைத் தீர்த்துக்கட்ட முயற்சி செய்தான். நரி தப்பித்து ஓடியது. அன்று மாலை, அவனும் அழகான விடுதிக்குள் நுழைந்து முதல் மகனைப் போன்றே தன்னை மறந்து குடி, விருந்தில் காலத்தைக் கழித்தான்.மேலும் பல நாள்கள் ஆகின. கடைசி மகன் தான் செல்வதாகச் சொன்னான். ஆனால் தந்தை முதலில் மறுத்தார். பின்னர், வெறுவழியின்றி அனுப்பிவைத்தார். அவனும் காட்டுக்குள் நரியைச் சந்தித்தான். ஆனால் தனது சகோதரர்களைப் போலன்றி, நரியின் அறிவுரையை காதுகொடுத்துக் கேட்டான். மேலும் நரியைத் தீர்த்துக்கட்ட நினைக்கவில்லை. இதனால் நரி அவனைத் தனது வாலில் உட்கார்ந்துகொள்ளச் சொன்னது. அவனது தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்தனர். பக்கத்து கிராமத்தை அடைந்தனர். அங்கே நரியின் அறிவுரையைப் பின்பற்றி மோசமான விடுதிக்குள் நுழைந்தான் அவன். இரவு முழுதும் அங்கேயே தங்கினான். அடுத்த நாள் காலை, நரி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. “இங்கேயிருந்து கிளம்பி நேராகப் போனால் ஒரு கோட்டை வரும். அங்கே பல சிப்பாய்கள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாதே. உள்ளே சென்றால் ஒரு மரக்கூண்டில் தங்கப் பறவை இருக்கும். பக்கத்திலேயே மிக அழகான தங்கக் கூண்டு ஒன்றும் இருக்கும். அதனைக் கண்டுகொள்ளாதே. கட்டாயமாக தங்கப் பறவையை எடுத்து தங்கக் கூண்டில் வைக்காதே. அப்படிச் செய்தால் நீ வருத்தப்படவேண்டியிருக்கும். மரக்கூண்டிலேயே வைத்து தங்கப் பறவையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடு” என்றது நரி. அவன் மீண்டும் நரியின் வாலில் ஏறிக்கொள்ள, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.கோட்டையில் எல்லாமே நரி சொன்னமாதிரியே இருந்தது. அங்கே மரக்கூண்டுக்குள் தங்கப் பறவை இருந்தது. பக்கத்தில் ஒரு தங்கக் கூண்டும் இருந்தது. அருகில் தோட்டத்திலிருந்து எடுத்துவந்திருந்த மூன்று தங்க ஆப்பிள்களும் இருந்தன. “சே, இந்த அழகான தங்கப் பறவையை, வெறும் மரக்கூண்டிலா எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்” என்று எண்ணி, அவன் கூண்டைத் திறந்து பறவையைப் பிடித்து தங்கக் கூண்டுக்குள் வைத்தான். உடனே தங்கப் பறவை பயங்கரமாகக் கத்தியது. சிப்பாய்கள் அனைவரும் விழித்துக்கொண்டு ஓடிவந்து அவனைக் கைதுசெய்தார்கள்.கைது செய்து, அவனை ராஜாவிடம் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவர் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார். ஆனால், காற்றைப் போலப் பறக்கும் ராஜாவின் தங்கக் குதிரை காணாமல்போயிருந்தது. அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், தங்கப் பறவையை அவனுக்கே தந்துவிடுவதாக அந்த ராஜா சொன்னார்.மிகுந்த துக்கத்துடன் மூன்றாவது மகன், ராஜாவின் தங்கக் குதிரையைத் தேடிக் கிளம்பினான். தன் விதியை நொந்துகொண்டான். நரி சொன்னபடி செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது நரி அங்கு வந்தது. “பார்த்தாயா, நான் சொன்னதை நீ ஏன் கேட்கவில்லை? பரவாயில்லை. நான் உனக்கு மீண்டும் நல்லதைச் செய்கிறேன். ஆனால் நான் சொல்வதை அப்படியே செய்யவேண்டும். இங்கிருந்து போனால் ஒரு கோட்டை வரும். அங்கே லாயத்தில் தங்கக் குதிரை இருக்கும். அதனருகில் குதிரைக்காரன் தூங்கிக்கொண்டிருப்பான். குதிரையின் முதுகில் தோலால் ஆன சேணம் பூட்டப்பட்டிருக்கும். பக்கத்திலேயே தங்கச் சேணம் ஒன்றும் இருக்கும். அதனைத் தொடாதே. தோல் சேணத்துடனேயே குதிரையை அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றது. நரி மீண்டும் தன் வாலை நீட்ட, அவன் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான். தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.நரி சொன்னதுபோலவே அனைத்தும் இருந்தன. “சே, இந்த அழகான குதிரைக்கு வெறும் தோல் சேணமா? இதற்கு தங்கச் சேணத்தைப் பூட்டுவோம்” என்று அதனை எடுத்து குதிரையின் முதுகில் போட்டான். உடனே குதிரைக்காரன் விழித்துக்கொண்டு சத்தம்போட, காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.அடுத்த நாள் அந்த ராஜாவும் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால், அழகான இளவரசி ஒருத்தியைக் கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தால் அவனது தண்டனையை ரத்துசெய்து, கூடவே தங்கக் குதிரையையும் தங்கப் பறவையையும் கொடுப்பதாகச் சொன்னார்.மிகவும் வருத்தத்துடன் அவன் நடக்க ஆரம்பித்தபோது நரி மீண்டும் அங்கு வந்தது. “ஏன் இப்படி சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்கிறாய்? பார்த்தாயா என்ன நடந்தது என்று? சரி, கடைசியாக மீண்டும் ஒருமுறை உனக்கு அறிவுரை தருகிறேன். உன்னை ஒரு கோட்டைக்கு அழைத்துச் செல்வேன். அங்கே நடு நிசியில் இளவரசி குளிக்கவருவாள். நேராகச் சென்று அவளை முத்தமிடு. அவள் உன்னுடன் கிளம்பிவிடுவாள். ஆனால் கவனம் தேவை. அவள் தன் தாயையும் தந்தையையும் பார்க்கவேண்டும் என்பாள். அதற்குமட்டும் சம்மதிக்காதே” என்றது நரி. நரி வாலில் அமர்ந்து, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து அந்தக் கோட்டையை அடைந்தனர்.நரி சொன்னதுபோலவே நடந்தது. அவன் இளவரசியை முத்தமிட, அவள் அவனுடன் ஓடிப்போக சம்மதம் தெரிவித்தாள். ஆனால் தாய், தந்தையை ஒருமுறை பார்த்துவிட அனுமதி கேட்டாள். அவன் முதலில் மறுத்தான். ஆனால் அவள் விடாது அவன் காலில் விழுந்து, கெஞ்சி, ஓவென்று அழ, கடைசியாக அவளுக்கு அனுமதிகொடுத்தான். அவள் தன் வீட்டை நெருங்கியதும் காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.அந்த ராஜா, அவனிடம் “என் ஜன்னலுக்கு வெளியே உள்ள மலை என் பார்வையைத் தடுக்கிறது. அடுத்த எட்டு நாள்களில் அந்த மலையைத் தரைமட்டமாக்கினால் என் பெண்ணை உனக்குக் கொடுக்கிறேன். இல்லாவிட்டால் மரணம்தான்” என்றார்.அந்த மலையை எப்படி உடைப்பது. ஏழு நாள்கள் வேலை செய்தும் ஒரு அங்குலம்கூடக் குறையவில்லை. அன்று நரி மீண்டும் அங்கு வந்தது. “போ, போய்ப் படுத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றது. அடுத்த நாள் காலை எழுந்துபார்த்தால், நரி மலையைத் தரைமட்டமாக்கியிருந்தது. ராஜாவும் வேறு வழியில்லாமல் இளவரசியைக் கொடுக்கவேண்டியிருந்தது.அவன் இளவரசியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். நரி அவனிடம் வந்து ஒரு யோசனை சொன்னது. “நான் சொன்னபடி நடந்தால் உனக்கு இளவரசி, குதிரை, பறவை எல்லாமே கிடைக்கும்” என்றது. “அதெப்படி முடியும்?” என்றான் அவன். “நான் சொல்வதைமட்டும் நீ கேட்டால் போதும். அதுதான் மாட்டேன் என்கிறாயா” என்றது நரி. “இந்த முறை நீ சொல்வதை அப்படியே செய்கிறான்” என்றான் அவன்.“இளவரசியை அழைத்துக்கொண்டுபோய் அந்த ராஜாவிடம் கொடு. அவன் குதிரையைக் கொடுப்பான். கிளம்பும்போது எல்லோருக்கும் கை கொடு. ஆனால் இளவரசியிடம் கடைசியாகச் செல். அவளுக்குக் கைகொடுக்கும்போது சரேலென அவளைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டு கிளம்பு. குதிரை காற்றுவேகத்தில் செல்லும் என்பதால் யாராலும் உன்னைப் பிடிக்கமுடியாது” என்றது நரி.இம்முறை நரி சொன்னதுபோல நடந்துகொண்டான் அவன். இளவரசியுடன் தங்கக் குதிரையில் பறந்து வெளியேறியவன் சிறிது தூரம் சென்று நரியை மீண்டும் சந்தித்தான்.“நானும் இளவரசியும் வாசலில் நிற்போம். நீ அடுத்த ராஜாவிடம் போய், குதிரையைக் காண்பி. ஆனால் குதிரையிலிருந்து இறங்காதே. ராஜா, அது தங்கக் குதிரைதான் என்பதைத் தெரிந்துகொண்டதும் தங்கப் பறவையைத் தருவான். அது சரியான பறவைதானா என்பதைப் பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லி குதிரையின்மீதே அமர்ந்திரு. உன் கையில் பறவையைக் கொடுத்ததும் உடனே குதிரையைத் தட்டிக் கிளப்பி, வெளியேறு” என்றது நரி.இங்கும் நரி சொன்னபடியே நடந்தது. இவ்வாறாக தங்கப் பறவை, தங்கக் குதிரை, இளவரசி ஆகியோரோடு அவன் வெளியேறினான். நரி அவனிடம் மீண்டும் வந்தது. “இப்போது என்னைக் கொன்று என் கால்களையும் தலையையும் வெட்டிப்போடு” என்றது. அவன் மறுத்துவிட்டான். “சரி, நான் தொடர்ந்து உனக்கு நல்ல அறிவுரைகளாகவே சொல்லிவருவேன். இங்கிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் மரணதண்டனைக் கைதிகள் யாருக்கும் பிணை கொடுத்து விடுவிக்காதே. ஆற்றங்கரையில் உட்காராதே” என்று சொல்லிவிட்டுச் சென்றது நரி. “அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்லை” என்று நினைத்துக்கொண்டான் அவன்.அங்கிருந்து இளவரசியுடனும் தங்கக் குதிரை/பறவையுடனும் செல்லும் வழியில் தன் இரு சகோதரர்கள் தங்கிவிட்ட கிராமத்துக்கு வந்தான். அங்கே அவனது சகோதரர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறியிருந்தனர். அவர்கள் பிடிபட்டு, மரணதண்டனைக் கைதிகளாக இருந்தனர். மூன்றாவது மகன் தன் சகோதரர்களை மீட்கவேண்டி அந்த கிராமத்தவர் கேட்ட பிணைத்தொகையைக் கொடுத்தான். நரி சொன்ன அறிவுரையைக் கேட்காமல் மீண்டும் மீறினான். தன் சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு கட்டுவழியாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.காட்டு வழியாகச் செல்லும்போது ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து சாப்பிடலாம் என்று சகோதரர்கள் சொன்னார்கள். மீண்டும் நரி சொன்னதைக் கேட்காமல் மூன்றாவது மகன் உட்கார, அவனது சகோதரர்கள் அவன் பின் வந்து அவனைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட்டனர். பிறகு அவர்கள், இளவரசி, தங்கக் குதிரை, தங்கப் பறவை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர். தங்களது ராஜாவிடம் அனைத்தையும் சென்று காட்டி, தங்களது திறமையால்தான் இத்தனையும் கிடைத்தது என்றனர். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் குதிரை சாப்பிட மறுத்தது; பறவை பாட மறுத்தது; இளவரசி அழுதுகொண்டே இருந்தாள்.இதற்கிடையில், ஆற்றில் தள்ளப்பட்ட மூன்றாவது மகன் உயிர் போகவில்லை. நரி மீண்டும் அங்கு வந்தது. “சொல்லச் சொல்லக் கேட்காமல் இப்படிச் செய்கிறாயே. ஆனாலும் உன்னை அப்படியே விட எனக்கு மனதில்லை. என் வாலைப் பிடித்துக்கொள். உன்னை மேலே தூக்கிவிடுகிறேன்” என்றது. அவன் பிடித்துக்கொள்ள, அவனைக் கரைக்கு இழுத்தது. “நீ ஊருக்கு வந்தால் உன்னைக் கொலைசெய்ய உனது சகோதரர்கள் ஆட்களை அமர்த்தியுள்ளனர்” என்றது நரி. எனவே அவன் ஓர் ஏழை குடியானவனாக மாறுவேடம் போட்டுக்கொண்டு ராஜசபைக்கு வந்தான்.அவன் உள்ளே நுழைந்ததுமே தங்கக் குதிரை சாப்பிட ஆரம்பித்தது; தங்கப் பறவை பாட்டு பாடியது; இளவரசி அழுகையை நிறுத்தினாள். அவன் அரசனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னான். அரசன் இரண்டு கெட்ட சகோதரர்களையும் பிடித்து சிறையில் அடைத்தான். இளவரசியை மூன்றாவது மகனுக்கு மணம் செய்வித்தான். ராஜா இறந்ததும் அந்த ராஜ்ஜியமும் அவனுக்கே கிடைத்தது.பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் காட்டுக்குச் செல்லும்போது நரி அங்கே மீண்டும் வந்து தன்னை வெட்டிப்போடுமாறு கேட்டுக்கொண்டது. அவன் அவ்வாறு செய்ய, நரி ஒரு மனிதனாக மாறியது. அந்த நரி, இளவரசியின் சகோதரன். ஏதோ மந்திரத்தால் இப்படி நரியாக மாறியிருந்தானாம்.

மனசுக்குள் மரணம்


எனக்கு இது அதிசயமாக – ஆச்சர்யமாக – நம்பமுடியாததாக இருந்தது. இது, இன்றைக்கு மட்டுமில்லை. கடந்த சில வாரங்களின், சில நாட்களிலும் இப்படித்தான்...ஸாரி... என்ன விஷயமென்றே கூறாமல் பேச்சை வளர்க்கிறேன் அல்லவா?போன மாதத் துவக்கத்தில் ஒருநாள். காலை உறக்கம் கலைந்து எழுமுன், எழ மனமின்றி ஹாயாக கண்ணயருவோமே, அப்படிப்பட்ட கணத்தில் என் கனவில் – கனவென்றும் கூற முடியுமா தெரியவில்லை – ஒரு முகம் மின்னி மறைந்தது.அதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாலை செய்தித்தாளில் அந்தச் செய்தியைப் பார்க்கும் வரை. அதில் விபத்தில் இறந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வந்திருந்தது.. அவன் காலை என் மூளைக்குள் மின்னிய முகத்துக்கு சொந்தக்காரன்!அன்று முழுவதும் இது என் மனதைக் குடைந்து கொண்டேயிருக்க, அப்புறம் அதை மறந்துவிட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து மறுபடி மனசுக்குள் ஒரு காட்சி.எனக்குப் பின்னே வரும் யாரோ ஒருவனுக்கு வலது கால் துண்டாகி.... அவ்வளவுதான் அந்தக் காட்சி. ச்சே. முகமெல்லாம் தெரியவில்லை.அன்று முழுவதும் எனக்கு குழப்பமாகவே இருந்தது. பிறகு ஊரிலிருந்து என் நண்பன் வரவே அதை மறந்து அவனோடு அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே கடைத் தெருவுக்குப் போனோம்.டாஸ்மாக்கிலேயேவா, வாங்கி வீட்டுக்குப் போகலாமா என்று குழப்பப் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே கொஞ்ச தூரத்தில் ஏதோ விபத்து நிகழ கூட்டம் கூட ஆரம்பித்தது. பார்க்க ஓடிப்போய் திரும்பிவந்த நண்பனிடம் கேட்டேன்..“என்னாச்சுடா... கால் போச்சா?” என்ற என்னை வியப்பாய்ப் பார்த்து திரும்பத் திரும்பக் கேட்டான் “எப்படிடா சொன்ன?” என்று. நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு பயம் வர ஆரம்பித்தது.இதென்ன ஈ.எஸ்.பி. என்பார்களே.. அந்த மாதிரி எதாவதா? இருந்து தொலைக்கட்டுமே, நல்ல விஷயமாய் இருந்தாலென்னவாம்?அதற்குப்பிறகு கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு சம்பவங்கள். எல்லாமே நடந்துவேறு தொலைக்கிறது.சரி.. இப்போது இன்றைய குழப்பத்திற்கு வருவோம்.இன்று அதிகாலை கனவுக்குள் கண்ட காட்சி...நான் என் அறையை விட்டு இறாங்கி நடக்கிறேன். எனக்கு எதிரே வரும் உருவம் மீது, பின்னாலிலிருந்து வந்த லாரி மோதப்பட்டு... தூக்கி எறியப்பட....அந்த முகமும், உடலும் எனக்கு மிகப் பரிச்சயமானது. ஆனால் உற்று கவனிக்குமும் கனவு கலைந்துவிட்டது.நான் உடனேயே உடம்பு உதற எழுந்து, இதோ இந்த ஐந்து மணிவரை வெளியில் செல்வதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன்.இன்று சினிமாவுக்குப் போகலாம் என்று அழைத்த நண்பன் வந்தால், புறப்பட்டுப் போகலாம், நடப்பது நடக்கட்டும். இது மட்டும் நடந்துவிட்டால்.. இனி மறைக்கக் கூடாது. ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டைப் பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி சிகிட்சை எடுக்க ஆரம்பிக்கலாம். பிறகு பத்திரிகைகளுக்கும் விஷயத்தைத் தெரிவித்துவிடவேண்டும்.இந்தத் தீர்மானத்தில் நான் இருக்க.. இதோ வந்துவிட்டான் என் நண்பன்.“டேய்.. புறப்படுடா. மணி அஞ்சாயிடுச்சு. இன்னும் கிளம்பலியா?”“வர்றேன்” என் பதட்டம் மறைத்துச் சொன்னேன்.“சரி.. ட்ரெஸ் மாத்து. ஆமா, பக்கத்துல சலூன் வரப் போகுதா?”“ஆமா, யுவர்ஸ் ஹேர் ட்ரஸ்ஸர்ஸ்-ன்னு அடுத்த தெருவுல இருந்ததுல்ல. அதை இங்க ஷிப்ட் பண்றாங்க. ஏண்டா?” உடை மாற்றிக் கொண்டே கேட்டேன்.“இல்ல. சாமானெல்லாம் கொண்டு வந்துட்டிருக்காங்க. அதான் கேட்டேன். சரி கிளம்பு”என் எதிரில் வரப்போகும் துரதிருஷ்டசாலிக்கு அனுதாபம் தெரிவித்தபடி ரூம் பூட்டி குனிந்த தலையோடே தெருவில் இறங்கினேன்.எதுவோ வாகனச் சத்தம் க்றீச்சிட படாரெனத் தலை உயர்த்தினேன்...அடுத்த நொடி.. என் நண்பன் “டே......ய்” அலறலோடு என் கைபிடித்து இழுக்க, கை நழுவ, சுற்றி இருந்த சிலரின் திகில் பார்வையும் என்னைச் சூழ, நிலை தடுமாறிய லாரி ஒன்று என் பின்னால் இடித்து, முன் சக்கரத்தை உடம்பில் ஏற்றி....உயிர் பிரியும் கடைசி நொடியில் நான் கண்ட காட்சி..எனக்கெதிரில் வந்து கொண்டிருந்த இருவர் தூக்கிவந்த ஆளுயர நிலைக்கண்ணாடியைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்ததுதான்.

மனிதனின் பகுத்தறிவு இத படிங்க முதல்ல


பகுத்தறிவு
கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளிநாட்டான் கூறவேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பொது அறிவு வளர உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்படவேண்டும்.
(வ¤.6.12.47;1:3)
உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால¢மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.
(வ¤.22.5.61.1:பெ.செ.)
மற்ற நாட்டில் எல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு, அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாகக் கொள்வான். இந்த குப்பைக் கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம், இவைகளைத்தான் நம்புகிறான்.
(வ¤.10.7.61;3:2)
சிந்தனை அறிவு ஒன்றுதானே உண்மையறிவாகக் கருதப்படக்கூடியது? வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அப்படியானால், படித்த மேதாவிகள், பட்டதாரிகள், விஞ்ஞானப் பாடத்தில் பட்டதாரிகள், கல்லைக் கடவுள் என்று நம்பி அதன் காலில் விழுந்து வணங்குவார்களா? மகா விஞ்ஞானம் படித்த மகோன்னதப் பண்டித நிபுணர் என்பவர்களெல்லாம் பாபவிமோசனத்திற்காகத்தான் தீர்த்தமென்று சேற்று நீரை வாரித் தெளித்துக்கொள்வார்களா? அவர்கள் படித்த அறிவியலுக்கும் இந்தச் சாணி மூத்திரக் கலவைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
(பெ.சி.மி.102)
இராமாயணத்திலும், பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?
(பெ.ச¤.மிமி;651 - 2)
ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்ந்துப் பாருங்கள். அவன், (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்,
(பெ.சி.மிமி;971)
எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
(கு.4.5.30;10:4)
நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.
(கு.26.2.33;8:4)
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கலவையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.
(கு.25.5.35;15:2-3)
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தில் பேராலோ மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலோ நடத்தப்படக் கூடாது.
(கு.29.9.40;1:4)
மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல, பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.
(கு.23.11.46;7:2)
வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப்போட்டித் தொல்லை எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.
(வ¤.5.2.51;3:1)
மன¤தன¢தனது சமூகததை வஞச¤த்துப¢பொருள் சேர்த்துப் பகுத்தற¤வுள்ள தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்றுசொல்லுக¤றான். ஆனால் மிருகம, பட்ச¤ ஆகியவைகள் பகுத்தற¤வு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றன. அவற்றைப் பற்றி கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.
(வி.19.2.58.மி;பெ.செ.)
இரண்டாயிரம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய் எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அழுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.
(வ¤.12.1.61;பெ.செ.)
கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
(வ¤.3.4.61;3:5)
பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.
(வ¤.14.6.61;1.பெ.செ.)
குருட்டு நம்பிக்கையை அறவே விட்டுப் பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதானால் ஒரு மதமும் நிலைக்காது.
(வ¤.15.10.62;2:பெ.செ.)
பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான். பின்பற்றமாட்டான்.
(வ¤.17.10.62.2.பெ.செ)
நம் மக்கள் பக்குவமடைய மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
(வி.30.1.68;2:3)
பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.
(கு.9.12.28;11:2)
பகுத்தறிவு மூலம் மனிதனின் ஆயுசு வளர்ந்ததோடு மனிதனின் சாவு எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.
(வி.4.10.67;2:6)
அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருத்துக் கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுகிறானே, அதுதான் அறிவின்தன்மை.
(வி.13.9.68;2:3)
சிந்தனாசக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனைவிட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.
மனிதனிடமுள்ள வேறு எந்த சக்தியைக்காட்டிலும் பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா உயிர்களினின்றும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான் அவன் மனித்தன்மை பெற்றியங்குவதாக நாம் கூறமுடியும். பகுத்தறிவை உபயோகிக்காதவன் மிருகமாகவே கருதப்படுவான்.
(கு.1.5.48;5:3)
இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம் என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால், இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராய முடியாமல்போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப்பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.
காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான் எனது கருத்து.
(வி.3.11.67;2:2)
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(5.11.67;பெ.செ.)
நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?
(வி.5.11.67;2:2)
எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்.அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.
(வி.27.11.69;3:4)
அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!
(கு.30.10.32;9)
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?
(கு.1.11.36;5:1)
மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும்.
(வி.6.12.47;1:3)
ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
(கு.1.5.48;12:2)
இன்று நமக்கு வேண்டியது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும். அறிவு ஆட்சி செய்தல் வேண்டும்.
(வி.7.3.61;3:2)
மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.
(வி.14.3.61;3:1)
உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல, உங்கள் அறிவுதான். நீங்கள், நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள்.பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.
(வி.16.8.69;2:1)
சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.
(பெ.பொ:8)
மனிதன் நம்பிக்கைவழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை பெறமுடியும்.
(வி.13.8.61;3:5)
உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன்னோர் சொல்லித் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய - கண்டுபிடிக்க முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.
(வி.13.1.63.2:பெ.செ)
உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும்.
(வி.16.12.69;3:6)
மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.
(கு.20.1.35;10:4)
விடுதலை மற்றும் உண்மை இதழ்களிலிருந்து.
அறிவியல்
இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.
(கு.13.8.33;10:4)
இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள். தீ உண்டாக்கச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்;இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!
(வி.2.3.61:பெ.செ.)
கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். கண்காட்சிச் சாலையின் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவருவதற்குள் ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக் கொண்டுவிடுவான். அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டுகளித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்புப் பெறுகிறான். பல அதிசயக் கருவிகளைக் கண்டு அக மகிழ்கிறான். சுருங்கக் கூறின் கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெற வேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான்.
(வி.13.1.63:2:4)
கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப்பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக்கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.
(கு.11.8.29:10:2)
சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘‘எடிசன்’’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.
(பெ.சி.மிமி: 1220)
உணவுத்துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயக்க வைத்தோம், பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற் கேற்றாற்போல் மாற்றி ஓடச்செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச்செய்யாமல் மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஓன்றைக் கண்டுபிடித்து (சிறிய உணவு) அதைக் கொண்டே மனிதனை இயங்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.
(பெ.ந.வா.நே.;8)
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண் பெண் உறவிக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
(கு.30.1.36:15)
கல்வி
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.
(கு.29.7.31;8:1)
எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடமையைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமாக காரியமாய் இருக்கிறது.
(கு.22.11.36;19)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்தவேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெறவேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.
(கு.26.12.37;10:3)
கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
(வி.7.11.55;3:3)
ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
(கு.1.5.27;6:1)
எப்படியிருந்தாலும் புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போலாகும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. எனவே, பண்டிதர்களைக் கிட்டச் சேர்க்கும் காரியத்தில் மிக விழிப்போடு இருக்கவேண்டும்.
(கு.18.5.30;14)
ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதளவாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
(கு.12.2.44;9)
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
(வி.5.10.60;பெ.செ.)
பெருமைமிக்க ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை மதவாதிகளாக்க வேண்டுமென்று கருதுவதைவிட, அறிவாளிகளாக்க வேண்டுமென்று பாடுபடவேண்டும்
(வி.16.12.69;3:6)
நாட்டில் சாதியின் பேரால் ஒருவன் எதற்காக இழிமகனாகவும், இழிதொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்துவிட்டால் இழித்தொழிலுக்கென்று ஒரு சாதி இருக்க முடியுமா? படிப்பின்மையால்தானே இவர்கள் இழிதொழிலைச் செய்ய வேண்டியிருக்கிறது? அதனால்தானே இழிமக்களாகவும் கருதப்படுகின்றனர்?
(வி.12.6.61;பெ.செ.)
சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.
(வி.21.7.61;3:4)
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல: பள்ளிக்கூடம்தான். அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையான கல்விக்கூடங்கள்தான் இன்று நமக்கு மிக மிகத் தேவை.
(வி.6.7.68;3:5)
நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.
(வி.26.7.68;3:1)
பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவது ஒரு துறையில் விளக்கத்தையும்தான் உண்டாக்க உதவும். வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல துறைகளிலும் ஞானத்தையும் உண்டாக்கும்.
(கு.6.3.38:8:1)
நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு அவை அடங்கியனவே.இத்தகைய நிறுவனங்களால் படிப்பின் பயன் முழுமையாகக் கிடைத்துவிடாது, இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவன படிப்பகங்களேயாகும்.
(வி.8.1.61;2:5)
சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை என்றே கூறலாம்.
(கு.19.7.31:3)
நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்சிச்யும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.
(கு.22.8.37;10:3)
படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.
(வி.25.1.47;3:3)
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்குமுறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.
(வி.1.3.56;3:3)
நாட்டை நல்லமுறையில் வளப்படுத்த நான் நாட்டின் அதிகாரியாக இருந்தால், அதிக வரி போடுவேன். ஏழைகளிடத்தில் எவ்வளவுதான் கையில் கொடுத்தாலும் அதை உடனே செலவு செய்து விடுகிறார்கள். ஆகவே அவர்கள் கையில் பணம் கொடுக்காமல் வரியாகப் பிடித்து அவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.
(வி.23.7.56;3:5-6)
மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயும் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(வி.17.3.68;2:3)
பாரதிதாசன் அவர்களது பாடல்களை வகுப்புக்குத் தகுந்தபடி தொகுத்துப் பாடமாக வையுங்கள்: ஐந்தாண்டு அறிவு ஓர் ஆண்டில் தோன்றிடும்.
(வி.23.5.68;2)
பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருந்ததல். இவைகள் நமக்குக் கடவுளைவிட மேலானவை.
(வி.27.9.55;3:3)
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது.
(வி.5.10.61;பெ.செ.)
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது.
(வி.9.4.62;பெ.செ.)
மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்.
(வி.17.5.62;பெ.செ.)
முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்.
(வி.15.7.62;பெ.செ.)

பணம் படுத்தும் பாடு

கார் முழுவதும் வைரம் பதிக்கப்பெற்றுள்ளது. விலை 25 கோடி ரூபாய்கள்


பணம், இல்லாதவனை மட்டுமா படுத்துகிறது?இருப்பவனையும் படுத்துகிறது!இன்று இரண்டு விதமான மக்கள்பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள்ஒரு வகை!பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை!இந்த இரண்டாவது வகையினர் செய்யும் கோமாளித்தனம்தான் சகிக்க முடியாமல்இருக்கும்.சராசரி, தலைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில், உலகில் பசியோடுஇருப்பவர்களின் எண்ணிக்கை 200 கோடி மக்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறதுஉலகின் பலரையும் கசக்கிப் பிழியும் பெட்ரோலியம் கச்சா பொருட்களால்கிடைக்கும் அபரிதமான காசு என்ன செய்யச் சொல்கிறது பாருங்கள்

ஏழை பசி உணவு உயிர்







பசியின் தத்துவம்.

ஜீவர்களுக்கு பசி என்னும் ஒன்றைக் கடவுள் ஏற்படுத்தி உள்ளதில் தான் - ஒரு பெரிய தத்துவம் அடங்கி இருக்கின்றது. உடம்பில் உயிர்ச்சக்தி இருந்து கொண்டு, ஜீவ களையோடு கூடிய புற வளர்ச்சிக்கும் (சிவ களை அல்லது) அறிவு விளக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றதாம். இந்த உயிர்ச் சக்தியில்தான் கடவுள் தத்துவம் - பசியின் வண்ணமாக வெளிப்பட்டுள்ளது.

உயிர்ச் சக்தியில் நிறை அருள் அமுதம் வெளிப்பட்டிலங்கும் போது ஆனந்த வடிவாகக் கேடின்றி விளங்குவான் மனிதன்.

இவ்வருள் அமுதம் கிடைக்கப் பெறாத வரை புற உணவுச் சக்தியால் தான் உயிர் விளங்குகின்றது. இவ் உணவால் ஏற்படும் உயிர்ச் சக்தி குறைபாடுடையது. அடுத்தடுத்துத் தினமும் உணவு ஏற்று உயிர் விளக்கத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதாம்.

பசிக்கு உணவு

அப்படி உணவு வழங்கப் பெறாத போதுதான் உயிர்ச்சக்தி மங்குகின்றது. உடலிற் சோர்வு ஏற்படுகின்றதும். பொறி புலன்களின் விளக்கம் குன்றுகின்றது. உள்ளுணர்வு தடுமாறுகின்றது. அறிவு அனுபவமும் சுருங்குகின்றது. இவை தான் பசியின் செயலாக அறியப்படும்.

இந்தப் பசியை ஒழிப்பதற்கு ஆகாரம் ஏற்பது தான் முறையாக உள்ளது. மற்ற எந்தவித தந்திர உபாயங்களாலும் பசியை நீக்கிக் கொண்டு வாழ முடியாதாம்.

பசியின் கொடுஞ் செயல்களை உணர்ந்தும், அதன் ஆற்றலைப் பொறுக்க முடியாமலும், மனிதன் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றான். உயிரையே கூட அலட்சியப் படுத்திவிடும் நிலைக்கு வந்து விடுகின்றான்.

இப்படிப்பட்ட பசியை, உணவினால் மாற்றி விட்டு, உள்ளும் புறமும் ஒளி பெறச் செய்து விடுவதுதான் ஜீவகாருண்யத்தின் அருஞ் செயலாக இருக்கின்றது. பசி என்னும் ஒன்று இல்லையானால், இந்த ஜீவகாருண்யச் செயலுக்கே இடமில்லாது போகும்.

இதிலிருந்து, ஜீவகாருண்யத்தின் மேன்மையும் அதனை ஒவ்வொரு சன்மார்க்கியும், தனது வாழ்வில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியமும், உணரப்படலாகின்றது.


























Monday 13 October, 2008

சன் டிவி வரலாறு

கொஞ்சம் அத்தியாவசிய அரசியல்.....

சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்
சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது.
கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான் கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியது.
தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கருத்துகணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும், ப.சிதம்பரத்திற்கு 24மதிப்பெண்ணும் , அன்புமணிக்கு 2மதிப்பெண்ணும் தந்து, கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி. தனக்குதானே கிரிடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? .ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...? இன்னும் எத்தனை காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன் தான் அடுத்தவாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார்.
அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின் கருணாநிதியின் முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்.... ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநியின் கழுத்திற்குமேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே போற்றும்இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா' கலாநிதிபோட்ட அவசர கணக்கில் உருவான கருத்துகணிப்பு எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது.
கருணாநிதியின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க அழகிரி, கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20சதவிகிதமும் வழங்கப்பட்டிருந்த கருத்துகணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி புரிந்துகொண்டார்கருணாநிதி.
இந்தப்பின்ணணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை எரித்து, பஸ்களை உடைத்து செயல்படும் செய்தி காலை 9.30க்கே மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல் துறைக்கு தலைமைதாங்கும் அமைச்சரான அவர், காவல் துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும் கட்டளைகளை பிறப்பிக்கவில்லை, பிறகு 11மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.
கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது. அவரது நீண்ட ஆயுளை வேண்டி அவரது மனைவியும், துணைவியும் நித்தநித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரிடம் கோப உணர்வே மேலோங்கியது.
இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை. மதுரையில் கலவரம் ஆரம்பித்தவுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி அடிப்பட்டது இதற்கு பிறகு தான் மீண்டும் தினகரன் அலுவலகத்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீவைத்தனர். கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையினரிடமும், அழகிரியிடமும் முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின.
இதனால் தான் அவ்வளவு அத்துமீறல்களுக்குபிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்புபாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள் பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமரவைத்ததும், அடுத்த நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும், நடைப்பட்டுகொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான பிரச்சினையல்ல. இது கட்சிதலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சினை என்பதே பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது.
கருணாநிதியின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டுமெனில் மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின் அசுர பலத்திற்கு அச்சாணியாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் பலம் போன்றவைகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங்களை புரிந்து கொள்ளலாம்.
*மணம் வீசாத பூமாலை*
1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை ஏறிய- அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டுவந்தனர் மாறன் சகோதரர்கள். இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின் திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது. பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.
வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் நடந்தேறியது.
1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்கள் மௌனமானர்கள். மணம்வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது. காமாலைப்போல் கண்களை உறுத்திய - கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைக்காரர்கள்.அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல், செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மயிருந்தனர்.
*சன் தொலைக்காட்சியின் தொடக்கம்*
அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர்.
பத்திரிக்கையாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலிமாறனுக்கு சொன்னவர். அவர் அரபு நாடுகளில் வாழும் மலையாளிகளுக்காக தினசரி நான்கு மணி நேரம் நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் அதில் சுமார் அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை அணுகினார். அப்போது அவரிடம்,'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது' என தோண்டித்துருவி விசாரித்த முரசொலி மாறன் அவரிமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் அவரை முந்தி சென்று, சம்பந்தபட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்.
சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த அதே நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக்காட்சியை தமிழகத்தில் தோற்றுவித்தார் முரசொலி மாறன். அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.
'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .
1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின் பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன் படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்கு தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த சேட்டிலைட் ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர். முரசொலி வளாகத்தில் இயங்கிய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலைகாட்சிக்கும் பொறுப்பேற்றனர். அதன்படி சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும் கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாகப்பட்டனர். அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தினர்.
*பிரகாசிக்கமுடியாத 'சன்*'
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத- அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள்கிளப்பிக் கொண்டிருந்தது.மாறன் சகோதர்களுக்கு படைப்பற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.
*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*
மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.
அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும். பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசி வழியாக பங்கேற்கும் பல பிரபலநிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள் துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல சதிதிட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது. மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, 'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!
'ஹாத்வே'யின்கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.
*இந்தியாவில் வேறெங்கும் இல்லை*
இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம்கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக்காட்சியைத்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும் 'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது . இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.
இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே- தங்கள் நலன் களுக்கு அனுகூலமானதை மட்டுமே-மக்கள் பார்வைக்கு கொண்டுச்செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம்போனது. வியாபாரத்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்குப் பிறகான ஒரு அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும் காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளைவீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில் டிரான்ஸ்பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதிச்செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது. ஆனால் ஜெ.ஜெ.தொலைக்காட்சியினர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல் போய், வழக்கம்போல் அத்துமீறி செயல்படமுயன்ற போது அன்னியசெலவானி மோசடியில் அகப்பட்டு அடங்கிப்போனர்கள்.
கருணாநிதியின் உடன் பிறந்த அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன் தான் முரசொலி மாறன்.'1967ல் தி மு க சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர நேரிட்ட போது முதலமைச்சர்பொறுப்பு ஏற்கவேண்டி பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை அறிஞர்அண்ணா ராஜூனாமா செய்தபோது, அந்த சீட்டை அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றதந்தவரல்லவா கலைஞர். அந்த கலைஞர் இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும் கேட்டுப்பெற்றால் என்ன?" என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில் தயாநிதியும் தயாரானார்.
ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும் இரவுநேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.
*தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள்*
அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதிமாறன். ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது பெரியளவு விமர்சனக்கணைகளை வீசவில்லை.
அதே சமயம் தொலைப்பேசியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும் பேசலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது, ரோமிங் கட்டணத்தை சமச்சீராக்கியது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யதூண்டியது, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்றவற்றால் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானார் தயாநிதி மாறன்.
திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளராக அடையாப்படுத்தினர். மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு தலைமை தாங்க பொறுத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில் விலாவாரியான கடிதங்கள் வெளியாகின.
*தயாநிதிமாறன் தனிபெரும் திறமையாளரா...?*
புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தயாநிதி. ஆனால் அவரது செயல்பாடுகளால் BSNL எனப்படும் தொலைத்தொடர்பு துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்கவேண்டும் . 'தனியார் தொலைப்பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ வளர்ப்பதற்கு மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர் அதிகாரிகளும், ஊழியர்சங்கங்களும் பல முறை குற்றசாட்டியுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை தயாநிதி மூடிமறைக்க முயன்றார். இது போன்ற நடவடிக்கைகளால் இடது சாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும் ஏற்பட்டது.
சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப்பதற்கான சாதனங்களை வழங்குதல் மற்றம் ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்பதற்காக வழக்கமான சந்தை மதிப்பைவிடவும் கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளையடித்து வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது புதிய தகவல் தொழில் நுட்ப துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில் இதை கண்டுபிடித்து ஒரு டெண்டரை நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்கவிருந்த ரூ 1, 800காடி காப்பாற்றப்பட்டது. ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ?
மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும், மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000கோடிக்குமேல் கையிருப்புமுள்ள மிகப்பெரிய நிறுவனம் ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் BSNLவெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது இப்படிப்பட்ட திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதிமாறனின் பதவி பறிப்பின் போது சில ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்துவிட்டோமோ....." என புலம்பி தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது
*போட்டியாளர்களை பொசுக்குவேன்*
'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம் வாதாடி பதவிப் பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை. தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த விண்ணப்பங்களை அலட்சியம் காட்டினார். TRAI லைசென்சும், W.P.C கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது. அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ. தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட 24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்ப்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதி மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது) 'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு ரத்துச்செயப்பட்டது. இப்படியாக சுமார் 60சேனல்களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி.
ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிப்பரப்பு தடைசெய்யப்பட்டது விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார் பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால் விளைவுகள் விபரிதமாகும்' என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ளமுடியாது' என்பதே தயாநிதி அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது.
*கதிகலங்கிய கருணாநிதி*
இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொண்டாரில்லை. உலகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, ' இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.'விட்டேனா பார் உன்னை' என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணநிதி, பேரனை அழைத்து கண்டித்ததாகச் செய்தி இல்லை.
கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, மற்ற அமைச்சர்களை கடுகளவும் மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும் கருணாநிதி இதையெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான, பழைமைவாத, மூடநம்ப்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலித்தனமான கருத்துகளை மீட்ருவாக்கம் செய்வதில் சன்தொலைகாட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டாவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை. கூட்டணிகட்சிகளுக்கிகிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்கு பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டுவிட்டனர்' என அறிய வந்த போது தான் கதிகலங்கிப் போனார். கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம் செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார்.
*எப்போது முதல் இந்தப் பிளவு ?*
**
1993-ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம். சன்தொலைகாட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன் படி , சன் தொலைகாட்சியில் கலாநிதி மாறனின் 90சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குமார்க்கெட் நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,000கோடி..! அதாவது இது அதிகாரப்புர்வமான, சட்டப்படியான சன் தொலைகாட்சி மூலமான சொத்துமதிப்பு மட்டும் தான்!
இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதிமாறன் அறிவிக்கப்பட்டார். ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள் , எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ், DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு நடத்திவருகிறார்.இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.
கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள் பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார். (ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார்களை தீவிரமாக ஆதரிக்கிறார்)
ஆரம்பத்தில் சன்தொலைகாட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005-ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது20சதவிகித பங்குகளை விட்டுக்கொடுத்து விட்டு விலகினார் என செய்தி வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்துகோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி, அதில் ஐந்துகோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். தயாயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குசந்தை நிலவரப்படி (ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை இருமடங்காகியிருக்கும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும் நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு எந்த பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!
*தொடர்ந்து செய்த துரோகங்கள்*
ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில் பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி.
தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஓளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும்,அறிக்கைகளையும் கூடுமானவரை தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இயன்றவரை இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர் விரும்பவில்லை.கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன், கலாநிதிமாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறுபிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி .
*சன் டிவியின் சமூக சேவை*
பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசுகளல்லவா... பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணாவின் வேலைக்காரி, ரங்கோன்ராதா, கருணாநிதியின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான நகைச்சுவைகள் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை சவக்குழிக்குள் தள்ளுவதற்காகவே அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி ' வேப்பிலைக்காரி, கோட்டை மாரியம்மன், விக்கிரமாதித்தன், சொர்க்கம்...... போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி கொஞ்சமா,நஞ்சமா?
ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க...
சூனியவாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்!
சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசயத்தையும் சாத்தியப்படுத்தலாம்...
அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்.........
இவையெல்லாம் விஷத்தையே வெட்கப்படவைக்கும் வீரிய நச்சல்லவோ!
தமிழ் தெரியாதவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருக்கமுடியும் என்ற போக்குகள். இவை மட்டுமின்றி குடும்பங்களின் அமைதியைக்குலைக்கும் குரோதச் சிந்தனைகளின் குவியல்களாக எண்ணற்ற தொடர்கள், அவற்றில் விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழிவாங்கும் போக்குகள், கொலை,கற்பழிப்பு,வன்முறை....
என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்!
சன் தொலைக்காட்சியோடு நிற்கவில்லை இவர்களின் சமூகசேவை. "எந்நேரமும் மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் சிந்தனை மழுங்கவேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல்,
'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர் எப்போதும் இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த செய்தியை மட்டுமே மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற பெருந்தன்மையோடு 'சன் நியூஸ் சேனல்',
இப்போது குழந்தைகளையும் குட்டிச்சுவராக்கிவிட 'சுட்டி சேனல்' இவற்றை பார்க்காவிட்டால் மக்களின் பகுத்தறிவு மங்கிவிடும்' என்று தான் இலவச தொலைக்காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி.
*யாருக்கு யாரால் நன்மை :*
1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலைகாட்சியின் பலம் பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், நேர்காணல்கள், விவாதங்கள், கருத்துகணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது.
கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன் தொலைகாட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது.... அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது... என்றும், சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாததென்றும் மாறன் சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்து போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர்.
அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க வேட்பாளர்களுக்கு சன் குழுமத்திலிருந்து நிறைய பண உதவியும் தரப்பட்டுள்ளது. திமு.க தலைமை கஞ்சத்தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள். திமு.க தலைமையகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியதுபோல் மாவட்ட கட்சி அலுவலகங்களையும் மாற்ற திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். பிரச்சாரம் செய்ய கருணாநிதிக்கு சொசுகு கார் தந்ததுபோல் மாவட்ட செயலாளர்களுக்கும் கார்கள் தரவும் அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க் தொழில் வாய்ப்பை தரவும் திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். இந்த சூழலில் தான் கருணாநிதியின் அடுத்த வாரிசு பற்றிய கருத்துகணிப்பை நடத்தியது தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி உசாரானார்.
*தயாநிதியின் தணியாத பேராசை*
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார விஸ்தரிப்பிற்கும், பாதுக்காப்பிற்கும் போட்டியாளர்களை பொசுக்குவதற்கும் தயாநிதி தயங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம்-அவர்களது நிறுவனங்களில்- அண்ணன் கலாநிதியையும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்கமாகக் கேட்டார்.
ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத்தந்தார். ஸடார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கையாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வி.யே விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப் போனார்கள்.
மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள்.
ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின் விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.
மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து, சிறுகேபிள் ஆபரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன் சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.
மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்ப்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.
அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர். "அழகிரியை சிறைக்குள்தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....." என மார்த்தட்டினார்கள்.அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம் கொள்வற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது.
தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத்தான் கருணாநிதி எதிர்க்கொண்டார். பொது மக்கள் மத்தியிலேயே பட்டப்பகலில் பகிங்கரமாக தனது கட்சிக்காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டதையும், அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும், அதை தடுக்கத்தவறி காவல் துறையினர் செயலற்று வேடிக்கை பார்ததால் தன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்ட தன் மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அவர் அழகிரியை அரவணைப்பதால் அழகிரியின் அராஜகங்களை அங்கிகரித் துள்ளதாக மக்கள் கருதினார்கள். துரோகம் செய்தவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்ற கோப உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.தன்னை தவிர தாங்கிப்பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்களை, கருணாநிதியே கைவிட்டபின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது.
*கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள் *
ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு


சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண்டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குதான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரலும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகிவிடுகின்றனர்.
போட்கிளப்பில் 36கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியிலிருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.
சுமார் 40,000கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40கோடியை இன்று வரை திருப்பிதர மனமில்லாதவராய் இருக்கிறார்.
*வாரிசுபோட்டி வந்தது எதனால்?*
அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார். அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்டநிலையிலும் என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்கவருகளாக ஆயத்தப் படுத்தினார். கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை.
எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது.கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும் நாவலர் நெடுஞ்செழியனை நல்ல முறையில் நடத்தவில்லை அதனால் அவரும் 1977ல் வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்துஎன்று அவரையும் அகற்றினார். இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் தயாநிதி மாறன் போன்றவர்கள் தான்தோன்றிதனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை அடிப்படையில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது. அதுவே கொள்ளை அடிப்படையில் செயல் பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது.
இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப்பாகும் என கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் என்று அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்கவேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி. அது எவ்வளவு பெரிய தவறு என இன்று அவர் உணர்ந்திருக்ககூடும். ஒரு வேளை அதே சட்டத்தை கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஊடகத்துறையில் தனியொரு நிறுவனமே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கபளிகரம் செய்வது மாதிரியான போக்குகளுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஒரேநிறுவனம், ஒரேபிரதேசத்தில் பல சேனல்களை ஆரம்பிப்பது, காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) செய்வதை தடுப்பது மாதிரியான சட்டங்கள் 1980,1990களிலிருந்து அமலில் உள்ளது. இது போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எல்லா தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்படவேண்டும்.

தமிழில் எழுதுங்கள்